பல்லவர் வரலாறு | Pallava History

பல்லவர் வரலாறு.!
Pallava History.!



★  பல்லவர் யார் என்பது பற்றி ஆராய்ச்சியாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. வட இந்தியாவில்  ருந்த பஹ்லவர் என்ற மரபினரே பல்லவர் என்பது ஒருசாரார் கருத்து. மணி பல்லவம் (இலங்கை) என்னும் தீவிலிருந்து வந்தவர்கள் என்பது மற்றொரு கூற்று. 


★ சில ஆராய்ச்சியாளர் களோ தட்சிணப்பகுதியை ஆட்சி செய்த சாதவாகனப் பேரரசர் களுக்குப் பிரதிநிதிகளாய் விளங்கியவர்களே பல்லவர் என்று கூறியுள்ளனர்.


★ பல்லவர்கள் தமிழ் நாட்டு மரபினரே என்றும், சங்க காலத்தில் ஆண்ட திரையர் வழி    வந்தவர்கள் என்பதும் சிலஅறிஞர்களின் கருத்து.


★  பல்லவர்கள் பிராக்ருதம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளை ஆட்சி மொழியாகப் பயன்படுத்தியதால் அவர்கள் தமிழ் மரபினர் அல்லர் என்பது சிலரது கருத்து.

எனவே வலுவான, தெளிவான சான்றுகள் கிடைக்கும் வரை பல்லவரின் பூர்வீக மரபு எது என்று உறுதியாகக் கூற இயலாது.

வரலாற்றுச் சான்றுகள் :
(Historical evidence) :

★  பல்லவர்களை முற்காலப் பல்லவர், பிற்காலப் பல்லவர் எனப் பகுத்துக் கொண்டால் அவர்கள் பங்கைத் தெளிவாக அறிய இயலும்.

★  மகாபலிபுரத்திற்கு (மாமல்லபுரம்) அருகிலுள்ள   வயலூர் எனும் ஊரில் இராஜ சிம்ம பல்லவன் காலத்திய   (கி.பி.700-728) கல்தூண் ஒன்று உள்ளது. அதில் முதல் பல்லவ அரசனின் பெயரில் தொடங்கி ஐம்பத்து நான்கு பல்லவ அரசர்களுடைய பெயர்கள் கல்வெட்டாகப் பொறிக்கப்பெற்றுக்காணப்பெறுகின்றன. 

முற்காலப் பல்லவர்கள் :
(Early Pallavas) :

★  சில பல்லவ அரசர்கள் வெளியிட்ட செப்பேடுகள் கிடைத்துள்ளன. மயிதவோலுப்    பட்டயம், ஹிரதகல்லிப் பட்டயம்,    குணபரதேயப்பட்டயம் போன்ற அப்பட்டயங்கள் தமிழ் மொழியில் எழுதப்படாமல் இருப்பதாலும், ஆந்திரநாட்டுப் பகுதிகள்     பற்றிய செய்திகளைக் குறிப்பிடுவ தாலும்    சிவஸ்கந்தவர்மன், விஜயஸ்கந்தவர்மன் போன்ற பல்லவ அரசர்கள் முற்காலப் பல்லவர்களாகக் குறிக்கப்படுகின்றனர்.

★  பிற்காலப் பல்லவப் பேரரசர்களில் முதலாமவனாகக் குறிக்கப்படுபவன் சிம்மவிஷ்ணு. ஏறத்தாழ கி.பி.550-570 வரை ஆட்சி செய்தவனாகக் கருதப்படும் சிம்மவர்மனின் மகனே இச்சிம்மவிஷ்ணு.    இச்சிம்ம     விஷ்ணுவுக்குப்    பிறகு மகேந்திரவர்மன்,    முதல் நரசிம்மவர்மன்,.   இரண்டாம்  மகேந்திரவர்மன், முதல் பரமேஸ்வரவர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன், இரண்டாம் பரமேஸ்வரவர்மன், இரண்டாம் நந்திவர்மன்,தந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன், நிருபதுங்கன்,அபராஜிதன்  ஆகிய பேரரசர்கள் ஆட்சி செய்து, தமிழகத்தில் பல்லவர் ஆட்சியை நிலை பெறுமாறு செய்தார்கள். இவர்கள்பிற்காலப்  பல்லவர்களாகக் கருதப் படுகின்றனர்.


★ சோழ நாட்டுப் பள்ளன் கோயில் செப்பேட்டுச் சாசனத்தை   வழங்கிய வனான சிம்மவர் மனுக்கு இரு மகன்கள் இருந்தனர்.முதலாமவன் சிம்மவிஷ்ணு. இரண்டாமவன் பீமவர்மன்.

சிம்மவிஷ்ணுவினால் தொடங்கப் பெற்ற பிற்காலப் பல்லவர் ஆட்சி, தந்தை மகன் எனத் தொடர்ந்து இரண்டாம் பரமேசுவரவர்மன் வரை நீடித்தது. இவ்வரிசையில் கடைசி மன்னனான பரமேசுவரவர்மனுக்கு வாரிசு (மகன்)இல்லாததால், சிம்மவர்மனின் இரண்டாம் மகனான பீமவர்மனின் வழியில் தந்தை மகன் எனத் தொடர்ந்த வரிசையில்) வந்த ஆறாவது தலை முறையைச் சார்ந்த பல்லவ மல்லன் எனும் இரண்டாம் நந்திவர்மனுக்கு முடி சூட்டினர். பின்பு அவனது வழியில் வந்த அரசர்களால் பல்லவர் ஆட்சி தொடர்ந்தது.


பல்லவ ஆட்சிபற்றிய மூலங்கள :
(Sources of Pallava rule) :

 ★ பல்லவ அரசர்கள் ஆட்சி செய்த காலகட்டத்தில் அப்பேரரசர்களாலும் பிறராலும் வெளியிடப்பெற்ற செப்பேட்டுச்சாசனங்கள், கல்வெட்டுக்கள், பல்லவர் காசுகள், இலச்சினைகள்,   பிராக்ருதம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப் பெற்ற நூல்கள், நடுகற்கள், குடைவரைக் கோயில்கள்,கட்டுமானக்  கோயில்கள் ஆகியவையே, அவர்கள் வாழ்ந்த காலத்துத் தரவுகளை நமக்குத்     தெரிவிக்கும்     சான்றா தாரங்களாக விளங்குகின்றன.


★ இவை தவிர, பல்லவர் நாட்டைச் சுற்றிலும் இருந்து அரசாண்ட சாளுக்கியர், இராட்டிரகூடர், கதம்பர், கங்கர், களப்பிரர், பாண்டியர், முத்தரையர், பாணர் ஆகியவர்களின் பட்டயங்களும் கல்வெட்டுகளும் கூட, பல்லவர் வரலாறு அறியத் துணை நிற்கின்றன.


★  இலக்கியங்களாகத் திகழும் சைவசமயக் குரவர்கள் எழுதிய தேவாரத்திருமுறைகளும், வைணவப் பெரியார்கள் பாடியருளிய நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்,மகேந்திர வர்மன் இயற்றிய மத்த விலாசப்பிரகசனம், இராஜசிம்மன் காலத்தில் எழுதப்பட்ட அவந்திசுந்தரிகதா, பாரதவெண்பா, நந்திக்கலம்பகம், சோழர்காலத்துப் பெரியபுராணம், இலங்கை நாட்டு வரலாற்று நூலான மகாவம்சம் ஆகியவையும் பல்லவர் வரலாறு அறிய உதவும் மூலங்களாக விளங்குகின்றன..


பல்லவர் வரலாறு | Pallava History பல்லவர் வரலாறு | Pallava History Reviewed by Bright Zoom on March 23, 2022 Rating: 5

No comments:

Other Posts

Powered by Blogger.