ஓன்பதாம் வகுப்பு தமிழ்
1. அமுதென்று பேர்
9 th std tamil Notes
பாடதலைப்புகள்
I. தொடர்களை மாற்றி உருவாக்குக.
II. சொற்களைத் தொடர்களாக மாற்றுக.
III. பொருத்தமான செயப்படுபொருள் சொற்களை எழுதுக.
IV. பொருத்தமான பெயரடைகளை எழுதுக.
V. பொருத்தமான வினையடைகளைத் தேர்வுசெய்க.
VI. அடைப்புக் குறிக்குள் கேட்டுள்ளவாறு தொடர்களை மாற்றி எழுதுக.
VII. வேர்ச்சொற்களை வைத்துச் சொற்றொடர்களை உருவாக்குக
VIII. சிந்தனை வினா
IX. தமிழ் எண்கள் அறிவோம்.
X. கலைச்சொல் அறிவோம்
XI. பலவுள் தெரிக.
XII. மொழிபெயர்க்க
XIII. அடைப்புக்குள் உள்ள சொற்களைக் கொண்டு கோடிட்ட இடங்களில் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி எழுதுக.
XIV. தொடரைப் பழமொழிகொண்டு நிறைவு செய்க.
XV. அகராதியில் காண்க
XVI. கொடுக்கப்பட்ட வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி விடுபட்ட கட்டங்களில் காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை நிறைவு செய்க
XVII. தா, காண், பெறு, நீந்து, பாடு, கொடு போன்ற வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி மேற்கண்ட கட்டத்தினைப் போன்று காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை அமைத்து எழுதுக.
XVIII. அடைப்புக்குள் உள்ள சொற்களைக் கொண்டு எழுவாய், வினை அடி, வினைக்குப் பொருத்தமான தொடர் அமைக்க.
I. தொடர்களை மாற்றி உருவாக்குக.
அ) பதவியை விட்டு நீக்கினான் – இத்தொடரைத் தன்வினைத் தொடராக மாற்றுக.
விடை :
பதவியை விட்டு நீக்குவித்தான்.
ஆ) மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்தனர்– இத்தொடரைப் பிறவினைத் தொடராக மாற்றுக.
விடை :
மொழியியல் அறிஞர்கள் திராவிட மொழிகளை ஆய்வு செய்வித்தனர்.
இ) உண்ணப்படும் தமிழ்த்தேனே – இத்தொடரை செய்வினைத் தொடராக மாற்றுக.
விடை :
உண்ணும் தமிழ்த்தேனே
ஈ) திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுத்துள்ளனர் – இத்தொடரை செயப்பாட்டுவினைத் தொடராக மாற்றுக.
விடை :
திராவிட மொழிகளை மூன்று மொழிக் குடும்பங்களாகப் பகுப்பட்டுள்ளன.
உ) நிலவன் சிறந்த பள்ளியில் படித்தார் – இத்தொடரைக் காரணவினைத் தொடராக மாற்றுக.
விடை :
நிலவன் சிறந்த பள்ளியில் படிபித்தான்.
II. சொற்களைத் தொடர்களாக மாற்றுக.
அ) மொழிபெயர் – தன்வினை, பிறவினைத் தொடர்களாக.
A. மொழி பெயர்த்தாள் – தன்வினை
B. மொழி பெயர்ப்பித்தாள் – பிறவினை.
ஆ) பதிவுசெய் – செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக.
A. பதிவு செய்தான் – செய்வினை
B. பதிவு செய்யப்பட்டது – செயப்பாட்டு வினை
இ) பயன்படுத்து – பிறவினை, காரணவினைத் தொடர்களாக.
A. பயன்படுத்துவித்தாள் – பிறவினை
B. பயன்படுத்தினாளா – காரணவினை
ஈ) இயங்கு – செய்வினை, செயப்பாட்டுவினைத் தொடர்களாக.
A. இயங்கினாள் – செய்வினை
B. இயக்கப்பட்டாள் – செயப்பாட்டுவினை
III. பொருத்தமான செயப்படுபொருள் சொற்களை எழுதுக.
(தமிழிலக்கிய நூல்களை, செவ்விலக்கியங்களை , நம்மை, வாழ்வியல் அறிவை)
அ) தமிழ் …………………………. கொண்டுள்ளது.
விடை : செவ்விலக்கியங்களை
ஆ) நாம் ___________ வாங்கவேண்டும்.
விடை : செவ்விலக்கியங்களை
இ) புத்தகங்கள் _____________ கொடுக்கின்றன.
விடை : வாழ்வியல் அறிவை
ஈ) நல்ல நூல்கள் _________ நல்வழிப்படுத்துகின்றன.
விடை : நம்மை
IV. பொருத்தமான பெயரடைகளை எழுதுக.
(நல்ல, பெரிய, இனிய, கொடிய)
அ) எல்லோருக்கும் _______________ வணக்கம்.
விடை : இனிய
ஆ) அவன் ____________நண்பனாக இருக்கிறான்.
விடை : நல்ல
இ) _____________ ஓவியமாக வரைந்து வா.
விடை : பெரிய
ஈ) ______ விலங்கிடம் பழகாதே.
விடை : கொடிய
V. பொருத்தமான வினையடைகளைத் தேர்வுசெய்க.
(அழகாக, பொதுவாக, வேகமாக, மெதுவாக)
அ) ஊர்தி _____________ சென்றது.
விடை : மெதுவாக
ஆ) காலம் ____________ ஓடுகிறது.
விடை : வேகமாக
இ) சங்க இலக்கியம் வாழ்க்கையை _________ காட்டுகிறது.
விடை : அழகாக
ஈ) இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும்____ காட்டு.
விடை : பொதுவாக
VI. அடைப்புக் குறிக்குள் கேட்டுள்ளவாறு தொடர்களை மாற்றி எழுதுக.
அ) நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். (வினாத்தொடராக)
விடை : நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினரா?
ஆ) பாடினான். (எழுவாய்த் தொடராக)
விடை : அவன் பாடினான்.
இ) இசையின்றி அமையாது பாடல். (உடன்பாட்டுத் தொடராக)
விடை : இசையோடு அமையும் பாடல்
ஈ) நீ இதைச் செய் எனக் கூறினேன் அல்லவா? (கட்டளைத் தொடராக)
விடை : நீ இதைச் செய்
VII. வேர்ச்சொற்களை வைத்துச் சொற்றொடர்களை உருவாக்குக.
அ) தா (அடுக்குத் தொடர், உடன்பாட்டுவினைத் தொடர், பிறவினைத் தொடர்)
A. தா தா – அடுக்குத் தொடர்
B. தந்தேன் – உடன்பாட்டுவினைத் தொடர்
C. தருவித்தேன் – பிறவினைத் தொடர்
ஆ) கேள் (எழுவாய்த் தொடர், வினைமுற்றுத் தொடர், வினாத் தொடர்)
A. மாணவன் கேட்டான் – எழுவாய்த் தொடர்
B. கேட்டர் ஆரிசியர் – வினைமுற்றுத் தொடர்
C. யார் கேட்பவர்? – வினாத் தொடர்.
இ) கொடு (செய்தித் தொடர், கட்டளைத் தொடர், தெரிநிலை வினையெச்சத் தொடர்)
A. பாரி நெல்லிக்கனி கொடுத்தான் – செய்தித் தொடர்
B. ஏழைக்குப் பொருளைக் கொடு – கட்டளைத் தொடர்
C. மன்னர் நிறைய கொடுத்தார் – தெரிநிலை வினையெச்சத் தொடர்
ஈ) பார் (செய்வினைத் தொடர், செயப்பாட்டுவினைத் தொடர், பிறவினைத் தொடர்)
A. பார்த்தான் – செய்வினைத் தொடர்
B. பார்க்கப்பட்டான் – செயப்பாட்டுவினைத் தொடர்
C. பார்க்கச் செய்தான் – பிறவினைத் தொடர்.
VIII. சிந்தனை வினா
1. அவை யாவும் இருக்கின்றன.
– தவறு
2. அவை யாவையும் இருக்கின்றன.
– சரி
3. அவை யாவும் எடுங்கள்.
– தவறு
4. அவை யாவையும் எடுங்கள்.
– தவறு
5. அவை யாவற்றையும் எடுங்கள். – சரி
IX. தமிழ் எண்கள் அறிவோம்.
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
க | உ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | ௧௦/ ௰ |
தமிழ் எண்களில் எழுதுக.
- பன்னிரண்டு – கஉ
- பதின்மூன்று – க௩
- நாற்பத்து மூன்று – ௪௩
- எழுபத்தெட்டு – ௭௮
- தொண்ணூறு – ௯௦
X. கலைச்சொல் அறிவோம்
1. உருபன் – Morpheme
2. ஒலியன் – Phoneme
3. ஒப்பிலக்கணம் – Comparative Grammar
4. பேரகராதி – Lexicon
XI. பலவுள் தெரிக.
1. குழுவில் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க.
குழு – 1 | குழு – 2 | குழு – 3 | குழு – 4 |
நாவாய் | மரம் | துறை | தன்வினை |
……………. | ……………. | ……………. | ……………. |
தோணி | மர | விருத்தம் | காரணவினை |
விடை :
A. 1- வங்கம், 2- மானு, 3- தாழிசை, 4- பிறவினை
2. தமிழ் விடு தூது ……………. என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
A. தொடர்நிலைச் செய்யுள்
B. புதுக்கவிதை
C. சிற்றிலக்கியம்
D. தனிப்பாடல்
விடை : சிற்றிலக்கியம்.
3. விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக
A. …………….இனம்
B. வண்ணம் …………….…
C. ………….குணம்
D.வனப்பு …………….
l. மூன்று, நூறு, பத்து, எட்டு
II. எட்டு, நூறு, பத்து, மூன்று
lll. பத்து, நூறு, எட்டு, மூன்று
lV. நூறு, பத்து, எட்டு, மூன்று
விடை :
l. மூன்று, நூறு, பத்து, எட்டு
4. காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே!
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!……….. இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்-
A. முரண், எதுகை, இரட்டைத் தொடை
B. இயைபு, அளபெடை, செந்தொடை
C .எதுகை, மோனை, இயைபு
D. மோனை, முரண், அந்தாதி
விடை : C. எதுகை, மோனை, இயைபு
5. அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி – அடிக்கோடிட்ட சொற்களுக்கான
இலக்கணக்குறிப்பு –
A. வேற்றுமைத்தொகை
B. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
C. பண்புத்தொகை
D. வினைத்தொகை
விடை : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
XII. மொழிபெயர்க்க.
- 1. Linguistics – மொழி ஆராய்ச்சி
- 2. Literature – இலக்கியம்
- Philologist – மொழியியற் புலமை
- Polyglot – பன்மொழியாரளர்கள்
- Phonologist – ஒலிச்சின்ன வல்லுநர்
- Phonetics – ஒலிப்பியல்
XIII. அடைப்புக்குள் உள்ள சொற்களைக் கொண்டு கோடிட்ட இடங்களில் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி எழுதுக.
1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் ……………… (திகழ்)
விடை : திகழ்கிறது
2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் …………….. (கலந்துகொள்)
விடை : கொள்வாள்
3. உலகில் மூவாயிரம் மொழிகள் ………………………… (பேசு)
விடை : பேசப்படுகின்றன
4. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா ……………… (செல்)
விடை : சென்றனர்
5. தவறுகளைத் ………… (திருத்து)
விடை : திருத்துவேன்
XIV. தொடரைப் பழமொழிகொண்டு நிறைவு செய்க.
- இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து
- சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
- கல்லாடம் படித்தவரோடு சொல்லாடாதே
- கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
XV. அகராதியில் காண்க.
- நயவாமை – விரும்பாமை
- கிளத்தல் – சிறப்பித்து கூறுதல், புலப்படக் கூறுதல்
- கேழ்பு – உவமை, ஒளி, நிறம்
- செம்மல் – தலைவன், தலைமை, இறைவன், சிவன்
- புரிசை – மதில், அரண், அரணம், இஞ்சி
XVI. கொடுக்கப்பட்ட வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி விடுபட்ட கட்டங்களில் காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை நிறைவு செய்க
வா | |||
இறந்த காலம் | நிகழ்காலம் | எதிர்காலம் | |
நான் | வந்தேன் | வருகிறேன் | வருவேன் |
நாங்கள் | வந்தோம் | வருகிறோம் | வருவோம் |
நீ | வந்தாய் | வருகிறாய் | வருவாய் |
நீங்கள் | வந்தீர்கள் | வருகிறீர்கள் | வருவீர்கள் |
அவன் | வந்தான் | வருகிறான் | வருவான் |
அவள் | வந்தாள் | வருகிறாள் | வருவாள் |
அவர் | வந்தார் | வருகிறார் | வருவார் |
அவர்கள் | வந்தார்கள் | வருகிறார்கள் | வருவார்கள் |
அது | வந்தத | வருகிறது | வரும் |
அவை | வந்தன | வருகின்றன | வரும் |
XVII. தா, காண், பெறு, நீந்து, பாடு, கொடு போன்ற வேர்ச்சொற்களைப் பயன்படுத்தி மேற்கண்ட கட்டத்தினைப் போன்று காலத்திற்கேற்ற வினைமுற்றுகளை அமைத்து எழுதுக.
இறந்த காலம் | நிகழ்காலம் | எதிர்காலம் | |
தா | தந்தான் | தருகிறான் | தருவான் |
காண் | கண்டான் | காண்கிறான் | காண்பான் |
பெறு | பெற்றேன் | பெறுகிறேன் | பெறுவேன் |
நீந்து | நீந்தினாள் | நீந்துகிறாள் | நீந்துவாள் |
பாடு | பாடினாள் | பாடுகிறாள் | பாடுவாள் |
கொடு | கொடுத்தார் | கொடுக்கிறார் | கொடுப்பார் |
XVIII. அடைப்புக்குள் உள்ள சொற்களைக் கொண்டு எழுவாய், வினை அடி, வினைக்குப் பொருத்தமான தொடர் அமைக்க.
(திடலில், போட்டியில், மழையில், வேகமாக, மண்ணை)
திடலில்
- நான் திடலில் ஓடினேன் (தன்வினை).
- திடலில் மிதிவண்டியை ஓட்டினேன் (பிறவினை)
எழுவாய்/பெயர் | வினை அடி | தன்வினை | பிறவினை |
கவிதை | நனை | ||
இலை | அசை | ||
மழை | சேர் |
காவியா – வரை
காவியா போட்டியில் வரைந்தாள் (தன்வினை)
காவியா போட்டியில் ஓவியத்தை வரைவித்தாள் (பிறவினை)
கவிதை – நனை
கவிதை மழையில் நனைந்தேன் (தன்வினை)
ரகு கவிதை மழையில் நனைவித்தான் (பிறவினை)
இலை – அசை
இலை வேகமாக அசைந்தது (தன்வினை)
காற்று இலையை வேகமாக அசைவித்தது (பிறவினை)

No comments: