TNPSC Tamil GK
போட்டித் தேர்வுகள் 2022 !
பொதுத்தமிழ் - இலக்கியம்
கம்பராமாயணம் பற்றிய குறிப்புகள்..!
கம்பராமாயணம் :
★ ஆசிரியர் - கம்பர்
★ ஊர் - சோழநாட்டுத் திருவழுந்தூர்
★ தந்தை - ஆதித்தன்
★ ஆதரித்தவர்
- திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல்
★ காலம் - 12 ஆம் நூற்றாண்டு
★ கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர்.
★ ஜெயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி ஆகியோர் இவர் காலத்துப் புலவராவர்.
★ கம்பர் செய்நன்றி மறவா இயல்பினர். தம்மை ஆதரித்த வள்ளல் சடையப்பரை ஆயிரம் பாடலுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.
★ 'யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்" என்று பாரதியார் கம்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
கம்பரின் பெருமைகள்:
★ கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்
★ விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்
★ கல்வியில் பெரியவர் கம்பர்
இயற்றிய நூல்கள்:
◆ சரசுவதி அந்தாதி
◆ சடகோபர் அந்தாதி
◆ திருக்கை வழக்கம்
◆ ஏரெழுபது
◆ சிலையெழுபது

No comments: