TNPSC- 2023: பொதுத்தமிழ் - உதயணகுமார காவியம் பற்றிய முக்கிய செய்திகள்..!!
பொதுத்தமிழ்
ஐஞ்சிறு காப்பியங்கள்
உதயணகுமார காவியம்
★ உதயணகுமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.
★ இந்நூலின் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை.
★ இந்நூல் சமண சமயத்தைச் சார்ந்த நூல் ஆகும்.
★ உதயணகுமார காவியம் மொத்தம் 369 பாடல்களை உள்ளடக்கியது.
★ இந்நூலின் மூலநூல் பெருங்கதை (கொங்குவேளிர் இயற்றியது).
★ இந்நூலின் பாவகை விருத்தப்பாவால் ஆனது.
★ இந்நூலின் காலம் 15-ஆம் நூற்றாண்டு ஆகும்.
★ பெருங்கதையின் தலைவனாகிய உதயணனே இந்நூலின் தலைவன் ஆவார்.
★ உதயணனின் மற்றொரு பெயர் விச்சை வீரன் (பலகலை வல்லவன்).
★ கதைப்படி உதயணன் கௌசாம்பி நாட்டு இளவரசன் ஆவான்.
★ சேதி நாட்டு ஆட்சிப் பொறுப்பை யூகியிடம் ஒப்படைத்துவிட்டுத் தான் கௌசாம்பியில் இருந்துகொண்டு வத்தவ நாட்டை ஆண்டவன்.
இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன.
● உஞ்சைக் காண்டம்
● இலாவாணக் காண்டம்
● மகத காண்டம்
● வத்தவ காண்டம்
● நரவாகன காண்டம்
● துறவுக் காண்டம்.
★ இந்நூலின் ஆறு காண்டங்களும்இ உதயணனின் கதையைக் கூறுகிறது.
★ இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன் வரலாற்றையும்இ பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது.
★ பெருங்கதை - பிருகத்கதா என்ற வடமொழி நூலின் அடிப்படையில் எழுந்தது என்றும் கூறுவர்.
★ குணாட்டியர் என்பவர் வடமொழியில் எழுதிய பிருகத்கதா என்னும் நூலைத் தழுவித் தமிழில் கொங்குவேளிர் என்பவர் 7-ஆம் நூற்றாண்டில் செய்த பெருங்கதை என்னும் நூலின் சுருக்கநூல் ஆகும்.
★ பல்வேறு தமிழ் நூல்களைப் பதிப்பித்தவரான உ.வே.சாமிநாத ஐயர் இந்நூலை 1935 ஆம் ஆண்டில் பதிப்பித்து வெளியிட்டார்.
No comments: