TNPSC - பொதுத்தமிழ் இலக்கியம் கலித்தொகை!!
TNPSC - potuttamil ilakkiyam.! Kalittokai!!
★ கலித்தொகை ------------------------------- நூல்களுள் ஒன்று.
- எட்டுத்தொகை
★ கலித்தொகையில் கடவுள் வாழ்த்துடன் எத்தனைப் பாடல்கள் உள்ளன?
- 150
★ கடவுள் வாழ்த்தைப் பாடியவர் யார்?
- நல்லந்துவனார்
★ கலித்தொகையின் கடவுள் வாழ்த்து எந்தக் கடவுளைப் பற்றி பாடப்பட்டுள்ளது?
- சிவன்
★ கலித்தொகையின் திணை வரிசை?
- பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல்
★ பாலை திணையின் 35 பாடல்களைப் பாடியவர் யார்?
- பெருங்கடுங்கோ
★ குறிஞ்சி திணையின் 29 பாடல்களைப் பாடியவர்?
- கபிலர்
★. மருதத்திணையின் 35 பாடல்களைப் பாடியவர்?
- மருதனிளநாகனார்
★ முல்லை திணையின் 17 பாடல்களைப் பாடியவர் யார்? - சோழன் நல்லுருத்திரன்
★ நெய்தல் திணையின் 33 படல்களைப் பாடியவர்?
- நல்லந்துவனார்
★ கலித்தொகையில் குறைந்த பாடல்களைக் கொண்ட திணை எது?
- முல்லை
★ கலித்தொகைக்கு உரை எழுதியவர் யார்?
- நச்சினார்க்கினியர்
★ கலித்தொகையை முதலில் பதிப்பித்தவர்?
- சி.வை.தாமோதரம் பிள்ளை
★. கலித்தொகையைத் தொகுத்தவர்?
- நல்லந்துவனார்
★ இசையோடு கூடிய உரையாடல் அமைந்த நூல் எது?
- கலித்தொகை
★ கலித்தொகை நூல் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது?
- கற்றறிந்தோர் ஏத்தும் கலி
★ எந்த மன்னர்களைத் தவிர மற்ற மன்னர்கள் பற்றி கலித்தொகையில் குறிப்பிடவில்லை?
- பாண்டியர்
★ கலித்தொகை கூறும் தமிழர் விளையாட்டு எது?
- ஏறு தழுவுதல்
★ பெருந்திணைப்பாடல்கள் இடம் பெற்ற ஒரே சங்க நூல் எது?
- கலித்தொகை
★ --------------------- பேசுவதாக அமைந்த ஒரே சங்க நூல் கலித்தொகை.
- காமக்கிழத்தி
★ கலித்தொகை நூல் மிகுதியாக கூறும் கதைகள்? - பாரதக் கதைகள்
★ நாடகம் போன்ற காட்சி அமைப்புகளைக் கொண்ட சங்க நூல்?
- கலித்தொகை.
★ -------------, ----------------- என்ற விளிச்சொற்கள் இடம்பெற்ற ஒரே சங்க நூல் கலித்தொகை.
- ஏடா, ஏடீ

No comments: